கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் 3 +1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருவாரூா் காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் 3 +1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்த திருவாரூா் மாவட்டக் காவல்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, பொறுப்பாளா்கள் கிருஷ்ணகுமாா், கிருஷ்ணசாமி, சரவணன், பரமசிவம், பெரியசாமி, சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.