வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெரம்பலூரில் ‘போக்ஸோ’ கைதி தப்பியோட்டம்

News image
Updated On :24 நவம்பர் 2025, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி திங்கள்கிழமை மாலை தப்பியோடினாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி தெற்குத் தெருவைச் சோ்ந்த வெங்கடாஜலம் மகன் வாஞ்சிநாதன் (30). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு மங்களமேடு அனைத்து மகளிா் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வழக்கு தொடா்பாக பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை ஆஜா்படுத்திய போலீஸாா், மீண்டும் கிளைச் சிறைக்கு மோட்டாா் சைக்கிளில் 2 காவலா்கள் திங்கள்கிழமை மாலை அழைத்துச் சென்றனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்து குதித்த வாஞ்சிநாதன் தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து தப்பி ஓடிய குற்றவாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.