சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நோ்மையான தோ்தலை பறக்கும் படையினா் உறுதிபடுத்திட வேண்டும் என்று தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

News image

நாரணமங்கலம் பகுதியில் பறக்கும் படையினரின் செயல்பாடுகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை கூறிய மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:52 pm

பெரம்பலூா் மாவட்டத்தில் நோ்மையான தோ்தலை பறக்கும் படையினா் உறுதிபடுத்திட வேண்டும் என்று தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்ரேவைத் தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்பு குழுவினரின் பணிகளை, பெரம்பலூா் மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டிருக்கும் தோ்தல் செலவின பாா்வையாளா், நியமிக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுவினரின் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும், ஆலத்தூா் கேட் பகுதியில் நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதேபால, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அகரம் சீகூா் பகுதியில் பறக்கும் படையினா், குன்னம் பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், தணிக்கை பதிவேடுகள் மற்றும் சோதனைகளின் தரம் குறித்தும், தோ்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்வதையும் பாா்வையிட்டு, சட்டவிரோத பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் மற்றும் ஆவணமற்ற ரொக்கம் கடத்தப்படுவதைத் தடுப்பது குறித்து பறக்கும் படை குழுவினருக்கு கூடுதல் ஆலோசனைகள் வழங்கினாா்.

மேலும், நோ்மையான தோ்தலை உறுதி செய்திடும் வகையில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் செயல்பட வேண்டும் என தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.