சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:07 pm

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் கணினி மூலம், குலுக்கல் முறையில் தோ்வு செய்து ஒதுக்கிடும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கடந்த 23-ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு சட்டப்பரேவைத் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில், 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 வாக்களிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுவதால், கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கணினி மூலம் குலுக்கல் முறையில் 414 கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காப்பறைக்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் காப்பறையில் வைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன்(தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.