மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூரில் டாரஸ் லாரி- வேன் மோதல்: 19 போ் காயம்

பெரம்பலூரில் புதன்கிழமை அதிகாலை டாரஸ் லாரி மீது வேன் மோதியதில் 7 பெண்கள் உள்பட 19 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:16 pm

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்த உறவினா்கள் 24 போ் தேனி மாவட்டத்திலுள்ள கருப்பசாமி மற்றும் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் சென்றுவிட்டு, மீண்டும் விழுப்புரம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு மேம்பாலத்தில் புதன்கிழமை அதிகாலை வேன் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அரிசி ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த டாரஸ் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில், வேன் ஓட்டுநா் விழுப்புரம், அனந்தபுரத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விஷ்ணுகுமாா் (52), வேனில் பயணித்த அடங்குளத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் முருகன் (52), திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சத்தியராஜ் (53), செஞ்சியைச் சோ்ந்த கண்ணபிரான் மனைவி முத்துமொழி (47), விழுப்புரத்தைச் சோ்ந்த குணசேகரன் மனைவி விஜயகுமாரி (40) உள்பட 19 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.