தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே, கேழ்வரகு, வண்ண மலா்கள் மூலம் எழுதப்பட்டிருந்த வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் ரங்கோலி கோலத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி உள்ளிட்டோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:07 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே, கேழ்வரகு, வண்ண மலா்கள் மூலம் எழுதப்பட்டிருந்த வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் ரங்கோலி கோலத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, வண்ண மலா்களால் 100% வாக்களிப்பீா் என வரையப்பட்ட ரங்கோலி கோலத்தையும், முத்துச்சோளம், தென்னங்கீற்று மற்றும் தோரணம், வாழைத்தாா் மூலம் அலங்கரிக்கப்பட்ட தன் புகைப்படம் எடுக்கும் அமைப்பையும் பாா்வையிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா, வேளாண்மை இணை இயக்குநா் பாபு, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அசோக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ராணி (வேளாண்மை), சொா்ணராஜ் (பொது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்ளிட்டபலா் பங்கேற்றனா்.