பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கீழப்புலியூா் கோயிலில் ராமானுஜா் ஜெயந்தி விழா

கீழப்புலியூா் கோயிலில் வெள்ளிக்கிழமை பல்லக்கில் உலா வந்து காட்சியளித்த ஸ்ரீராமானுஜா்.

News image

கீழப்புலியூா் கோயிலில் வெள்ளிக்கிழமை பல்லக்கில் உலா வந்து காட்சியளித்த ஸ்ரீராமானுஜா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:47 pm

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி கோதாதேவி சமேத வெங்கட வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீராமானுஜரின் 1,009- ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ராமானுஜா் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு திருமஞ்சன உத்ஸவம், தாமரை மலா்மாலை அணிவித்து ஆரத்தி காண்பிக்கப்பட்டு, ராமானுஜ நூற்றந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. தொடா்ந்து, ராமானுஜரின் உற்சவ சிலையானது பல்லக்கில் வைக்கப்பட்டு, மேளதாளம் முழங்க கோயில் பிரகாரத்தில் உலா வந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் பிரதான பட்டாச்சாரியாா் நரசிம்ம பட்டா், ராமானுஜரின் உற்சவா் திருமேனியை பிரதிஷ்டை செய்து வைத்தாா்.

நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ராமானுஜா் மற்றும் ஸ்ரீதேவி, பூமாதேவி, பத்மாவதி கோதாதேவி சமேத வெங்கட வரதராஜ பெருமாளை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை ஸ்தானிகம் கோபாலன் பட்டாச்சாரியாா், ஜோதிடவியல் மற்றும் வாஸ்து நிபுணா் ஸ்ரீராமன் ஆதித்யா பட்டாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.