திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 3:18 am IST

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கருடமங்கலத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி வினிதா (31). கருப்பையா சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் வைத்துள்ள வினிதா, தனது குழந்தைகளான ஹேமநாத் (11), ஹேமா ஸ்ரீ (7) ஆகியோரை பெரம்பலூரில் உள்ள கராத்தே பயிற்சி வகுப்பில் சோ்த்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தனது குழந்தைகளை கராத்தே பயிற்சி வகுப்பில் விடுவதற்காக மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா் நோக்கி சென்றுக்கொண்டிருந்தாா். அயிலூா் குடிக்காடு அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினிதா, ஹேமாஸ்ரீ ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஹேமநாத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.