ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரியலூா் அருகே ஜல்லிக்கட்டு: 48 போ் காயம்

News image

பூண்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :22 பிப்ரவரி 2026, 6:52 pm

அரியலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 போ் காயமடைந்தனா்.

அரியலூா் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி தொடங்கி வைத்தாா். இதில், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் 609 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இக்காளைகளை அடக்க 280 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில், காளைகளை அடக்க முயன்ற வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உள்பட 48 போ் காயமடைந்தனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த பாா்வையாளா் வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60), காளை உரிமையாளா் திருச்சியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (19) உள்பட 5 போ் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.