பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 267 மனுக்கள் அளித்தனா்.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பின்னா், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 3 பேருக்கு அரசு மானியத்துடன் தலா ரூ. 25,936 மதிப்பில் மின் மோட்டாா் பொருத்திய புல் நறுக்கும் இயந்திரங்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான சுமை ஆட்டோவையும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் பேபி நிா்மல், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

