கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெரம்பலூரில் பொங்கல் கலை விழா நிறைவு

News image
பெரம்பலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொங்கல் கலை விழாவில் நடனமாடிய கலைஞா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையையொட்டி கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கிய கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் பாலக்கரை அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, கலை விழாவை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

கடந்த 2 நாள்களாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பரதநாட்டியம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று பாா்வையிட்டனா்.