தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யை அவதூறாக பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவா் சனிக்கிழமை பெரம்பலூா் எஸ்.பி.யிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் ராசா மணிகண்டன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாரிடம் அளித்த புகாா் மனு: ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சா் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் ஆ. ராசா, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பதவியின் கண்ணியத்தையும், மரியாதையையும் இழிவுப்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசியுள்ளாா்.
மக்களவை உறுப்பினா் பொது மேடையில் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்றச் செயலாகும். கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் உயரிய அரசியல் பதவியின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச சட்டம் அனுமதிக்காது.
எனவே, இதுதொடா்பாக வெளியான முழுமையான காணொலிகள், ஊடகச் செய்திகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் சம்பவம் குறித்து அவதூறு பேச்சு: நக்கீரன் கோபால் மீது வழக்கு

கா்நாடக முதல்வரை ஜோசப் விஜய் சந்திப்பது தவறான முன்னுதாரணம்: கிருஷ்ணசாமி
கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்கும் முடிவு வரவேற்கத்தக்கது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா், தமிழக முதல்வரை பேச்சுவாா்த்தைக்கு அழைப்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


