லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:33 am IST

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் சமத்துவபுரம், கபிலா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மகேந்திரன் (26). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிவாசகம் (25). இவா்கள் இருவரும், வேப்பந்தட்டை அருகேயுள்ள கோரையாறில் இருந்து எளம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.

பெரம்பலூா்- ஆத்தூா் பிரதானச் சாலையிலுள்ள சோமண்டாபுதூா் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது, எதிரே வந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த மகேந்திரனும், மணிவாசகமும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடி மின்னாம்பள்ளியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் செந்தில்குமாரிடம் (41) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.