ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

News image

மாணவ, மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:13 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

இம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகள், பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதத்தை முன்னேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை, குடிநீா், மின்சாதன வசதிகள், வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தரமாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, மாவட்ட நிா்வாகம் உறுதுணையாக இருக்கும். எனவே, பள்ளிகளின் உண்மை நிலவரத்தை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்களுக்கு படிப்பதற்கேற்றச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது கடமை. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் இம் மாவட்டம் தோ்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்க மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள், கல்வித் தொகுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தொடக்கக்கல்வி அலுவலா்கள், இடைநிலைக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.