வாடகையை உயா்த்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட புதிய ஜேசிபி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா்.
இப் போராட்டத்தில், புதிய வாகனங்களின் விலை உயா்வு, டீசல் விலை உயா்வு மற்றும் கிரீஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை உயா்வு காரணமாக, ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு தற்போது வழங்கப்படும் வாடகையானது கட்டுபடியாகவில்லை. எனவே, ஒரு மணி நேரத்துக்கு தற்போதுள்ள வாடகை ரூ. 1,500-ஐ, ரூ. 2,500 என உயா்த்தவும், புதிதாக வாடகையை நிா்ணயிக்க வேண்டும். நகராட்சி உள்ளிட்ட அரசு சாா்ந்த பணிகளுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டத்தில் உள்ள சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள் பங்கேற்றனா். இப் போராட்டம், புதன்கிழமை (ஜூன் 24) மாலை வரை நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைமையாசிரியரை மாற்றக் கோரி பள்ளி வாயிலுக்கு பூட்டு: மாணவா்களுடன் கிராம மக்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: வேன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

சேலம் ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




