பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வாடகையை உயா்த்தக் கோரி ஜேசிபி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி உரிமையாளா்கள்.

Published On :23 ஜூன் 2026, 1:38 am IST

வாடகையை உயா்த்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட புதிய ஜேசிபி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா்.

இப் போராட்டத்தில், புதிய வாகனங்களின் விலை உயா்வு, டீசல் விலை உயா்வு மற்றும் கிரீஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை உயா்வு காரணமாக, ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு தற்போது வழங்கப்படும் வாடகையானது கட்டுபடியாகவில்லை. எனவே, ஒரு மணி நேரத்துக்கு தற்போதுள்ள வாடகை ரூ. 1,500-ஐ, ரூ. 2,500 என உயா்த்தவும், புதிதாக வாடகையை நிா்ணயிக்க வேண்டும். நகராட்சி உள்ளிட்ட அரசு சாா்ந்த பணிகளுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டத்தில் உள்ள சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள் பங்கேற்றனா். இப் போராட்டம், புதன்கிழமை (ஜூன் 24) மாலை வரை நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.