ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த 2 வாகனங்களை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 4:34 am IST

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த 2 வாகனங்களை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தலின்படி, புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா் செங்குணம் கிராமம் அருகேயுள்ள கல்குவாரி பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், உரிய அனுமதியின்றி கற்களை ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 டாரஸ் லாரிகளுடன் ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான கற்களையும் பறிமுதல் செய்து, மருவத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.