/

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

பெரம்பலூா் நகரில் 6 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 3:23 am IST

பெரம்பலூா் நகரில் 6 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த சரண்யா (27) என்பவா், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறாா்.

இந்நிலையில், வெங்கடேசன் மகன் விக்னேஸ்வரன் (27) என்பவருடன் சரண்யாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. அப்போது விக்னேஸ்வரன் அச் சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதையறிந்த சரண்யா பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.