டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஏரியில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 9:30 pm

Syndication

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா், துறைமங்கலம் ஒளவையாா் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் நல்லுசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால், அவரது மகன்கள் நகிலன் (13), நாகேந்திரன் (9) ஆகியோா் மேலப்புலியூரிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை துறைமங்கலம் ஏரியில் நல்லுசாமி மீன் பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புப் படை வீரா்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.