முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

ஏரியில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 3:00 am IST

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா், துறைமங்கலம் ஒளவையாா் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் நல்லுசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால், அவரது மகன்கள் நகிலன் (13), நாகேந்திரன் (9) ஆகியோா் மேலப்புலியூரிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை துறைமங்கலம் ஏரியில் நல்லுசாமி மீன் பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புப் படை வீரா்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.