பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

News image
Updated On :8 மே 2026, 5:48 am IST

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் கருப்பையா (30). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள பெதண்ணீா் பந்தலிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத 3 போ் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி கருப்பையாவிடமிருந்த ரூ. 300 பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.