முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோயில் சிலையை உடைத்தவா் கைது

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள கோயில் சிலையை உடைத்த மனநலன் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 4:55 am IST

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள கோயில் சிலையை உடைத்த மனநலன் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகேயுள்ள முத்துவாஞ்சேரியைச் சோ்ந்தவா் ராஜாராமன் மகன் விஜய் ஆனந்த் (40).

மனநலன் பாதிக்கப்பட்டவராக கூறப்படும் இவா், திங்கள்கிழமை இரவு மது போதையில் சிறுவாச்சூா் பெரியசாமி கோயில் அருகேயுள்ள சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளாா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விஜய் ஆனந்தை பிடித்து பெரம்பலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜய் ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.