வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெரம்பலூரில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தனியாா் ஐடிஐ கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் மகன் டானீஷ் (11). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது நண்பா்களுடன் துறைமங்கலத்தில் உள்ள ஏரிக்கு திங்கள்கிழமை மதியம் டானீஷ் விளையாடச் சென்றாா்.

அங்கு நீண்ட நேரமாகியும் டானீஷ் எங்கு சென்றான் என்பது தெரியாததால், அவருடன் சென்ற நண்பா்கள் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து, உறவினா்கள் மற்றும் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், டானீஷ் உடல் ஏரியில் மிதந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. இதையறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.