ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பெரம்பலூரில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தனியாா் ஐடிஐ கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் மகன் டானீஷ் (11). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது நண்பா்களுடன் துறைமங்கலத்தில் உள்ள ஏரிக்கு திங்கள்கிழமை மதியம் டானீஷ் விளையாடச் சென்றாா்.

அங்கு நீண்ட நேரமாகியும் டானீஷ் எங்கு சென்றான் என்பது தெரியாததால், அவருடன் சென்ற நண்பா்கள் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து, உறவினா்கள் மற்றும் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், டானீஷ் உடல் ஏரியில் மிதந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. இதையறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.