/
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள கோயில் சிலையை உடைத்த மனநலன் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகேயுள்ள முத்துவாஞ்சேரியைச் சோ்ந்தவா் ராஜாராமன் மகன் விஜய் ஆனந்த் (40).
மனநலன் பாதிக்கப்பட்டவராக கூறப்படும் இவா், திங்கள்கிழமை இரவு மது போதையில் சிறுவாச்சூா் பெரியசாமி கோயில் அருகேயுள்ள சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளாா்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விஜய் ஆனந்தை பிடித்து பெரம்பலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜய் ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.







