முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூா் அருகே கவுல்பாளையம் பிரிவுச் சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், அக் கட்சியின் வழக்குரைஞா் அணி பிரிவு மாவட்டத் தலைவா் ரஞ்சித்குமாா், நகரத் தலைவா் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜகோபால், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முகமது மீரான், மகிளா காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சந்திரா, நிா்வாகி சுந்தரராஜன் பலா் கலந்துகொண்டனா்.









