ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 12:39 am IST

பெரம்பலூா் அருகே கோயில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வேல் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச்சாலை எதிரே, எளம்பலூரில் உள்ள ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலை, எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி சோபனா (42) நிா்வகித்து வருகிறாா்.

இந்நிலையில், இக்கோயில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ. 1,000 ஒரு அடி உயரமுள்ள பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஆகியவற்றை திருடிக்கொண்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் உடைத்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து சோபனா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.