மத்திய அரசின் கலால் வரி விதிப்பைக் கைவிட வலியுறுத்தி நகை வணிகர்கள் கடந்த 3 நாள்களாக நடத்தி வரும் கடையடைப்புப் போராட்டத்தால் நகை வர்த்தகம் இன்றி பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து,மாவட்ட தங்கம், வைர, வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் வயி.ச. வெங்கடாசலம் கூறியதாவது: 2016 - 17ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வெள்ளி நீங்கலான தங்க நகை உள்பட பிறவகை ஆபரணங்களுக்கு 1 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்க நகை நிறுவனங்கள் கடந்த 3 நாள்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகரில் உள்ள 186 நகைக் கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 450 நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகைக்கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மத்திய அரசு தங்க நகைக்கு மட்டுமின்றி 27 பொருட்களுக்கு கலால் வரி 1 சதவிகிதம் கலால் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






