விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்றவரை விராலிமலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். விராலிமலை பகுதிகளில் விதிமீறி அரசு மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை காவல் துணை ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்தின்னிபட்டி அருகேயுள்ள செட்டியாப்பட்டியில் உள்ள உணவகத்தில் மதுவை பதுக்கி விற்ற பெருமாள் மகன் நல்லுச்சாமியை(37) கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.