விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து செயல்விளக்கம்

ஆலங்குடி அருகேயுள்ள  வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை  பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:57 am

DIN

ஆலங்குடி அருகேயுள்ள  வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த உரநிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை  பயிற்சி அளிக்கப்பட்டது.

வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் கோ-52 நெல் ரகத்தை பரவலாக்கம் செய்யும் விதமாக ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்துக்குள்பட்ட பாண்டிபத்திரம் கிராமத்தில் தங்கராசு என்பவரது வயலில் நெல் விளைச்சலை அதிகரிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயிரிடப்பட்டுள்ள கோ-52 நெல் ரகத்தை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதா, உதவி பேராசிரியர் முனைவர் கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, உதவி பேராசிரியர் கதிரவன் கூறியது:
 மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களை கணக்கிட வேண்டும்.
நடவு வயலில் நெல் பயிர் வேர்பிடித்து நன்றாக வளர்வதற்கும், நெல் பயிரில் பூக்கள் பூப்பதற்கும், நெல் மணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், நெல்மணிகள் முதிர்வடைவதற்கும் மணிச்சத்து இடவேண்டும். அதேபோல், நடவு வயலில் சாம்பல் சத்து இடும் போது, நெல் பயிரின் திடத்தன்மையை ஊக்குவித்து, பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களால் பாதிப்படையாமல் இருக்க எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. எனவே, விவசாயிகள் சமச்சீரான உரங்களை இட்டு மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.