47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பொன்னமராவதியில் ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி

பொன்னமராவதி ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:59 am

DIN

பொன்னமராவதி ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் உயர் தொடக்க நிலையில் எதிர்பார்க்கப்படும் அடிப்படை திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல்  ஆகிய திறன்களைப் பெற்றிருத்தல், மாணவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி விவாதிக்கும் திறன், மொழி ஆளுமைத்திறன், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையோடு தொடர்புபடுத்தும் திறன் ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் கௌசல்யா, ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம், புவனேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் பாண்டி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.