நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளுக்கு சனிக்கிழமை குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளுக்கு சனிக்கிழமை குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட  நிர்வாகம் வெளியிட்ட தகவல்:  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம்  இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை  நடைபெறவுள்ளதால் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீரேற்றும் பணிகள் நிறுத்தப்படும்.  
இதன் காரணமாக, 21.10.2017 (சனிக்கிழமை) அன்று,  இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 10 குடியிருப்புகள், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 5 குடியிருப்புகள் மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி பகுதி ஆகியவற்றுக்கு குடிநீர்  விநியோகம் தடை படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com