புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலை பாலதண்டாயுபாணி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றி சனிக்கிழமை மாலை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், கந்தர்வர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், தொழிலதிபர் எஸ்.வி.எஸ் வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.