பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு சுகாதார விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் இணைந்து நடத்திய விழாவிற்கு பொன்னமராவதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே.ராமதிலகம் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச.லதாதேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பூச்சி வரவேற்றார். பள்ளி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையை கடைபிடிக்கச் செய்த தலைமையாசிரியர் சதாசிவம் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதார விருதுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மண்டல திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வழங்கினார்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி பிரபாகரன், நேரு யுவகேந்திரா மாவட்டக் கணக்காளர் நமச்சிவாயம், புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிர்வாகி கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ப.முருகேசன் ஆகியோர் பேசினர்.
ஆசிரிய பயிற்றுநர் சக்திவேல் பாண்டி, தொடக்கக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் விக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


