முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

சிறுமி ஆஷிபா வன்கொலை:  காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபா மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:28 am IST

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபா மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சித்ரா தலைமை வகித்தார். 
வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். 
கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பெனட் அந்தோனி ராஜ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆஷிபா வன்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். கட்சியின் நகரத் தலைவர் இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.