கந்தர்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கிடாவெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், நாள்தோறும் மண்டகபடி தாரர்களால் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதி உலா தொடர்ந்து கிடாவெட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மெய்க்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









