எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

அன்னவாசல் அருகேயுள்ள விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேட் சாயூப் (51). இவர் விளத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி

Updated On :18 ஏப்ரல் 2018, 9:25 am IST

அன்னவாசல் அருகேயுள்ள விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேட் சாயூப் (51). இவர் விளத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி மும்தாஜ் பேகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது.  
இதையடுத்து, சேக் சாயூப் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சிமருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.