தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடி:  ஒருவர் கைது

அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடிசெய்ததாக புதுகை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த ஒருவரை குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:06 am

DIN

அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடிசெய்ததாக புதுகை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த ஒருவரை குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வி. ரவிச்சந்திரன்(48). இவரிடம், அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, புதுக்கோட்டை  ஜீவா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி உஷாராணி, இலுப்பூர் அருகேயுள்ள சங்கராப்பட்டியைச் சேர்ந்த பி.குமாரசாமி(55) ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.3.25 லட்சம் வாங்கினாராம். ஆனால், மூன்றாண்டுகளாகியும் ரவிச்சந்திரனுக்கு வேலையும் வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமலும் இருந்து வந்தனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரைத்தொடர்ந்து புதுகை  மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் குமாரசாமியைக் கைது செய்தனர். மேலும், உஷாராணியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.