வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 3:17 am

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பால்குடம், பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா ஜூலை 1ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, சூரப்பட்டி, படுதினிப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, மேலத்தானியம், அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தியும், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீஸார் செய்திருந்தனர். திங்கள்கிழமை (ஜூலை 9)  தேரோட்டம் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.