அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On :7 ஜூன் 2018, 8:47 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,  மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 46 மாணவிகள் விடுதிகள், 19 மாணவர் விடுதிகள் உள்ளன. பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு 5 விடுதிகள், மாணவிகளுக்கு 4 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில்  அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட  விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதி மாணவ, மாணவிகளுக்கு  உணவு, தங்கும் வசதி உள்பட அனைத்து அரசின் சலுகைகளும் வழங்கப்படும். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்  நல அலுவலகம் அல்லது இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில்  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.