அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் மாசி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு விழா கடந்த பிப். 20-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது, தொடர்ந்து தினமும் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட விருதபுரீஸ்வரர் தேரில் எழுந்தருளி தேர்வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பக்தர்களின் சரணகோஷத்துடன் அன்னவாசலின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் 9 மணிக்கு நிலையை அடைந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கோபாலசந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் சுமதி (அன்னவாசல்) மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர் காவல்படையினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ச. ராமராஜா, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.
அன்னதானம் அளித்த இஸ்லாமியர்கள்:
மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தேர்திருவிழாவையொட்டி அன்னவாசல் ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று கூடி அன்னதான விழா நடத்தினர். இவ்விருந்தில் அறுசுவை உணவு சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது.
இதுகுறித்து அன்னதான ஏற்பாடு செய்த அன்னவாசல் ஜமாத் துணை தலைவர் முகமது ரிசா, முகமது உசேன் கூறியது :
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாகவே இந்த அன்னதானத்தை நடத்துகிறோம். கடந்தாண்டு அன்னதானத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளோம். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது எங்களுக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.