/
தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற புதுக்கோட்டை நச்சாந்துப்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் மாணர் வெ. தினேஷ் அனுமந்த் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது.
இதில் வெண்கலம் வென்ற மாணவரை, பள்ளியின் செயலர் ராமநாதன், தலைமை ஆசிரியர் (பொ) தங்கமணி, உடற்கல்வி இயக்குநர் ராக்கேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் மங்கையர்க்கரசி, சண்முகவடிவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








