புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 934 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது.
இதையடுத்து கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 934 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


