பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

திருவப்பூர் கோயில் மாசித் திருவிழா ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம்

புதுக்கோட்டை திருவப்பூர்  முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:08 am IST

புதுக்கோட்டை திருவப்பூர்  முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 934 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  பூச்சொரிதலுடன் தொடங்கியது. 
இதையடுத்து கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார்.  இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 934 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். 
காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.