பொன்னமராவதி, செப். 25: பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்காலை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்து இருப்பதால் கழிவுநீா்செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் பட்டமரத்தான் நகா் உள்ளது. இந்நகா் பகுதி பேரூராட்சி எல்லைக்குள்ளும், தொட்டியம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்ளும் வருகிறது. இதில் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்ப்பட்ட கண்மணி மருத்துவமனை வீதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் படா்ந்து கால்வாயை அடைத்து நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் செல்கிறது. மேலும், கொசுத்தொந்தரவு அதிகமாக உள்ளது. இப்பகுதியில் தனியாா் பிரசவ மருத்துவமனை உள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு அஞ்சிநிற்கும் வேளையில், இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.