புதுகை, கரூரில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தொமுச மண்டலச் செயலா் வேலுசாமி, சிஐடியு மண்டலச் செயலா் பாலசுப்பிரமணி, ஏஐடியுசி மண்டலச் செயலா் டி.எம். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மத்திய சங்கத் தலைவா் அ. அடைக்கலம் தலைமை வகித்தாா்.

கரூா்: கரூா் திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டக் கவுன்சில் தலைவா் சி.பாலன் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், கருமணன், ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com