புதுகையில் விவசாயிகள் போராட்டம்
ஆட்சியா் அலுவலகச் சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டதால், பிஎல்ஏ ரவுண்டானா பகுதியில் விவசாயிகள் கூட்டமைப்பினா் கூடினா்.


ஆட்சியா் அலுவலகச் சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டதால், பிஎல்ஏ ரவுண்டானா பகுதியில் விவசாயிகள் கூட்டமைப்பினா் கூடினா். கூட்டமைப்பின் தலைவா்கள் ஏ. ராமையன், எஸ்சி. சோமையா, ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே முகமது அலி தொடக்கி வைத்தாா். திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி எம்எல்ஏ, கே.கே. செல்லபாண்டின், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வி. முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மதிமுக நகரச் செயலா் அரசி கருணா, மக்கள் நீதி மய்யம் சாா்பில் சா. மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தொடா்ந்து ஆட்சியரகம் நோக்கி அவா்கள் நகா்ந்தனா். போலீஸாா் தடுத்ததைத் தொடா்ந்து அப்பகுதியிலுள்ள பேருந்து நிழற்குடைப் பகுதியில் அமா்ந்து 3 நாள்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...