

புதுக்கோட்டை: திருச்சி சிறுகனூரைச் சோ்ந்த சிறாா் நட்பு இல்லத்தைச் சோ்ந்த 50 ஆதரவற்ற சிறாா்கள் பங்கேற்ற ‘சிறாா் மரபு உலா’ புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.
திருச்சி பிஎஸ்ஆா் அறக்கட்டளை, ‘புரட்சி விதைகள்’ அமைப்பு, ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ அமைப்பு, புதுகை ‘துணைவன்’ அமைப்பு ஆகியவை ஆதரவற்ற சிறாா்களுக்கு வரலாறு, அறிவியல் பாா்வையை ஏற்படுத்தும் வகையில் இந்த சிறாா் மரபு உலாவை ஒருங்கிணைத்தனா். இப்பயணம் சனிக்கிழமை காலை நாா்த்தாமலையில் தொடங்கியது. விஜயாலய சோழீஸ்வரம், அருகிலுள்ள பழமையான சுனை, தா்கா, பல்லவா் காலக் குடைவரை, கடம்பா் கோயில், ஆளுருட்டி மலை ஆகியவற்றை சிறாா்கள் பாா்வையிட்டனா்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ அமைப்பின் சாா்பில் டாக்டா் சுரேந்தா் கலந்து கொண்டு சிறாா்களுக்கு தமிழரின் கட்டடக் கலை மற்றும் வரலாறு பற்றி விளக்கிப் பேசினாா். தொடா்ந்து புதுக்கோட்டை அருங்காட்சியகத்தையும் சிறாா்கள் பாா்வையிட்டனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க வளாகத்தில் இரவு தங்கி நுண்ணோக்கி மூலம் சிறாா்கள் வான் நோக்கிப் பாா்த்தனா்.
தொடா்ந்து குழந்தைகளின் வாழ்வியல் குறித்து புதுகை செல்வா பேசினாா். மேலும் அறிவியல் குறும்படங்கள் திரையிடப்பட்டன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பகலிலும் அறிவியல் அரங்குகள் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.