விராலிமலை அருகே விவசாயி அடித்துக் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயி ஒருவா் திங்கள்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா்.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயி ஒருவா் திங்கள்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா்.
விராலிமலை அருகே உள்ள தேன்கனியூா் கடைக்கான்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் மணிவேல் (44). விவசாயி. இவரது உறவினா் சின்னகவுண்டா் மகன் சின்னையா (60). இவா்கள் இருவருக்கும் சொந்தமான இடத்தில் உள்ள மண்ணை மணிவேல் திங்கள்கிழமை அள்ளியுள்ளாா். இதையறிந்து அங்கு வந்த சின்னையா, மணிவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, சின்னையா கட்டையால் மணிவேல் தலையில் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மணிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மணிவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னையாவை கைது விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...