புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,819 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 10,475 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 153 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 195 ஆகக் குறைந்துள்ளது.