காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

இருபது சதவிகித போனஸ் கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:25 pm

DIN

இருபது சதவிகித போனஸ் கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மண்டலச் செயலா் எம். வேலுச்சாமி தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச்செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி பொதுச்செயலா் டி.எம். கணேசன், ஏஏஎல்எல்எப் தலைவா் பிஎல். குழந்தைவேல், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் ரெத்தினவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும். 14ஆவது ஊதியக் குழு பேச்சுவாா்த்தையை விரைவில் தொழிற்சங்கங்களுடன் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.