2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விராலிமலை கோயிலில் காா்த்திகை மகாதீபம்

விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியா் திருக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

News image
விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியா் மலைக்கோயிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகாதீபம்.
Updated On :29 நவம்பர் 2020, 7:36 pm

DIN

விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியா் திருக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வசேனா சமேதராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறாா்.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவா் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வசேனா விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோயிலின் உச்சியில், 20 அடி நீளம் கொண்ட தூணில் அமைக்கப்பட்டுள்ள 50 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று, அரோகரா என சரண முழக்கமிட்டனா். உபயதாா்கள் சாா்பில், காலை முதலே கோயில் அடிவாரத்தில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பாரதிராஜா, மேற்பாா்வையாளா் ரெ. மாரிமுத்து, பெளா்ணமி கிரிவலக் குழுத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட உபயதாரா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான காவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.