நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:11 pm

DIN

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, விவசாயிகள் சங்க நிா்வாகி சுந்தர்ராஜ், இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் இந்திராணி, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் விஜய், சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.